புதுக்கோட்டை, நவ.8 - புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண் டார்கோவில் ஊராட்சி ஒன்றியம் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 155 மாணவர்களுக்கும், கீரனூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 328 மாணவிகளுக்கும், ஒடுகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 99 மாணவர்களுக்கும், 82 மாணவிகளுக்கும் என மொத்தம் 664 மாணவ, மாணவிக ளுக்கு ரூ.33,61,170 மதிப்பிலான விலை யில்லா மிதிவண்டிகள் கீரனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமை வகித்தார். நிகழ்ச்சி யில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பி னர் எம்.சின்னத்துரை விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினர். முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே. செல்லப்பாண்டியன், குன்றாண்டார்கோ வில் ஒன்றியக் குழுத் தலைவர் கே.ஆர்.என்.போஸ், கீரனூர் பேரூராட்சித் தலைவர் ஜெயமீரா ரவிக்குமார், மாவட்ட கல்வி அலு வலர் ரமேஷ் உதவித் திட்ட அலுவலர் தங்கமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.