districts

img

பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டக் கூடாது சிபிஎம், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

புதுக்கோட்டை, ஏப்.18 - புதுக்கோட்டையை அடுத்த ரெங்கம்மா சத்திரத்தில் பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவ தற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுவதற்கு எதிர்ப்புத்  தெரிவித்து சிபிஎம், மாதர் சங்கத்தினர் தலைமையில் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவா சல் ஒன்றியம் வெள்ளனூர் ஊராட்சிக்கு  உட்பட்டது வடசேரிப்பட்டி கிராமம்.  இக்கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகில் நகர்ப்புற மேம்பாட்டு வாரி யத்தின் சார்பில் ரூ.44 கோடி மதிப்பீட் டில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர் களுக்கு 528 வீடுகளுடன் கூடிய அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுவதற்கு கடந்த ஆட்சியில் முடிவு செய்யப்பட்டு அதற் கான ஒப்பந்தமும் போடப்பட்டது. மேற்படி இடம் வடசேரிப்பட்டி, தாவுதுமில், முல்லைநகர், சிவப்பட்டி,  ரெங்கம்மாசத்திரம், முத்துடையான் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாண வர்களுக்கு அரசு உயர்நிலைப் பள்ளி யும், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மும் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டு ஊராட்சி யில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்நிலையில், இங்கு அடுக்குமாடி  குடியிருப்பு கட்டும் நடவடிக்கைக்கு அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். பொதுமக்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக அடுக்குமாடி கட்டும் பணி  தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பொது மக்களிடம் ஒப்புதல் பெற்ற பிறகே பணி  தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். கிராம மக்கள் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எதிர்ப்புத் தெரிவித்து உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

வீடுகளில் கறுப்புக்கொடி
இந்நிலையில், காவல்துறையி னரின் பாதுகாப்போடு கடந்த மார்ச் 30  ஆம் தேதி நூற்றுக்கணக்கான போலீசா ரின் உதவியோடு சம்பந்தப்பட்ட இடத்தில் குடியிருப்பு கட்டும் பணி தொடரப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரி வித்து அப்பகுதி மக்கள் ஜேசிபி இயந்திரங்களை முற்றுகையிட்டு அதி காரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோடு சாலை மறியல் போராட்டத்தி லும் ஈடுபட்டனர். ஆனாலும், கட்டிடம் கட்டும் பணி நிறுத்தப்படவில்லை. இந்நி லையில், கட்டிடம் கட்டும் பணிக்கு  எதிர்ப்புத் தெரிவித்து தங்கள் பிள்ளை களை பள்ளிக்கு அனுப்பாமலும், வீடு களில் கருப்புக்கொடி ஏற்றியும் தொடர்ந்து  எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

சாலை மறியல் போராட்டம்
இதனைத் தொடர்ந்து பொதுமக்க ளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கட்டி டம் கட்டும் பணியை உடனடியாக நிறுத்த  வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக  மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட் டையை அடுத்த சிப்காட் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போ ராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன், மாதர் சங்க மாவட்டச் செய லாளர் டி.சலோமி, வாலிபர் சங்க மாவட் டச் செயலாளர் துரை.நாராயணன் ஆகி யோர் தலைமை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் கே.சண்முகம், சி.அன்புமண வாளன், ஒன்றியச் செயலாளர் எம்.ஆர். சுப்பையா, ஒன்றியக்குழு உறுப்பினர் கள் எம்.ஜோஷி, ரகுபதி, ஒன்றியக் கவுன்சிலர் கண்ணதாசன், பேரூராட்சி கவுன்சிலர் கே.மகாலெட்சுமி மற்றும்  கிராம பொதுமக்கள் 500-க்கும் மேற் பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், தங்கள் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டினால் 528  வீடுகளுக்கும் தேவைப்படும் தண்ணீருக் காக நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்ப டும். இதனால், தங்கள் பகுதியில்  விவசாயம் பாதிக்கும். குடியிருப்பி லிருந்து கழிவு நீர் வெளியாகி விளை நிலங்களைப் பாதிக்கும். அதனால் ஒரு போதும் அடுக்குமாடி குடியிருப்பை அந்த இடத்தில் கட்ட விடமாட்டோம். ஊராட்சியில் தீர்மானம் நிறை வேற்றியுள்ளபடி அந்த இடத்தில் பள்ளிக் கூடம் மற்றும் மருத்துவமனை கட்ட வேண்டும் என்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இலுப்பூர் கோட்டாட்சியர் குழந்தை சாமி உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார். பொதுமக்களின் கோரிக்கை குறித்து அரசின் கவனத் திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதிய ளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.