புதுக்கோட்டை, ஏப்.10- புதுக்கோட்டையில் அனைத்திந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் சார்பில் பருவநிலை மாற்ற சவால்கள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் மாநிலத் தலைவர் எஸ்.தினகரன் பேசு கையில், ‘‘புவி வெப்பமடைதலை எதிர்கொள் வதில் நம்மிடம் பெரிய அளவில் எந்த முன் னேற்றமும் இல்லை. இதற்கான காரணங்க ளில் பெரும்பாலானவை மனிதத் தவறு கள்தான். நாடு முழுவதும் நாளொன்றுக்கு 62 மில்லி யன் டன் அளவுக்கு குப்பைகள் வெளியேற்றப் படுகின்றன. அவற்றில் 12 மில்லியன் டன் அளவு குப்பையைத்தான் நாம் தரம்பிரித்து முற்றிலும் அழிக்கும் பணியில் கையாள முடி கிறது. 33 சதவிகிதம் வனப்பரப்பு இருக்க வேண்டும் என்ற நிலையில், நாடு முழுவதும் 19.4 சதவிகிதம்தான் உள்ளது. தமிழ் நாட்டில் வெறும் 15 சதவிகிதமே உள்ளது. தேனீக்கள் என்றொரு இனம் அழிந்து போனால் அடுத்த 4 ஆண்டுகளில் மனித இனம் அழியும் என்கிறார்கள். அந்தளவு விவ சாய உற்பத்திக்கு உறுதுணையாக இருப் பவை தேனீக்கள். ஆனால், பயிர்களுக்கு நாம் போடும் ரசாயன உரங்கள் தேனீக் களை மட்டுமல்ல, பல வகையான பறவை களுக்கும் ஆபத்தாக இருக்கின்றன’’ என்றார். கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வெள்ளைத்துரை தலைமை வகித்தார். துணைச் செயலாளர் பழ.குமரேசன் வர வேற்றார். கோ.கலையரசன் நன்றி கூறி னார். மாவட்டச் செயலர்கள் பாலச்சந்திரன், சி.அன்புமணவாளன் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.