districts

img

பெண் குழந்தைகள், பெண்கள் பங்கேற்ற கொப்பித் திருவிழா

புதுக்கோட்டை, ஜன.16- பெண் குழந்தைகள் மற்றும் பெண் கள் பங்கேற்ற கொப்பித் திருவிழா நடந்தது. பெண்கள், குழந்தைகளின் கும்மியாட்ட மும் நடைபெற்றது.  புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்க லம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தில்  பிறந்த பெண் குழந்தைகள் பருவமெய்து வதற்கு முன்பு இந்த திருவிழாவில் கலந்து கொள்கிறார்கள். பிறந்த சிறு பெண் குழந்  தைகள் இருக்கும் வீட்டில், குழந்தைகளின் தாய் அல்லது சகோதரிகள் கலந்து கொள்  கிறார்கள். திருவிழாவில் பங்கேற்கும், குழந்தைகள், பெண்கள் திருவிழா முடி யும் வரை விரதம் இருந்து கலந்து கொள்  ளும், இந்த விழாவை கொப்பித் திருவிழா என்று கூறுகின்றனர்.
கிராம மக்களின் நம்பிக்கை
இந்த திருவிழாவை கொப்பித் திரு விழா என்று இப்பகுதி பொதுமக்கள் கூறு கின்றனர். ஞாயிறன்று நடைபெற்ற இந்த  திருவிழாவில் ஏராளமான பெண் குழந்தை கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். திருவிழாவைக் காண சுற்றுவட்டார கிரா மங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்தி ருந்தனர்.  இது குறித்து அப்பகுதி பெண்கள் மற்  றும் கிராம மக்கள் கூறுகையில், “காத்தான் -  தீர்த்தான் என இரு சகோதரர்கள் முந்தைய  காலத்தில் வாழ்ந்துள்ளனர். அதில் காத்  தான் மகள் கொப்பி அம்மாள் சிறு குழந்தையாக இருக்கும் போது தனது  பெரியப்பா தீர்த்தான் வீட்டுக்கு காட்டுப் பகு தியில் சென்று காணாமல் போய்விட்டார்.  பல நாட்களுக்கு பிறகு ஊரின் மையப்பகுதியில் உள்ள பாலை மரத்தின் மேல் இருந்து அம்மை நோய் தாக்கி இறந்து  கீழே விழுந்ததை பார்த்து கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அதன் பிறகு  கொடிய அம்மை நோய் வந்து யாரும் இறக்க கூடாது என்பதற்காக அம்மைக்கு பலியான கொப்பியம்மாளை நினைத்து சிறு பெண் குழந்தைகள் அம்மைக்கு எதி ரான நோய் தடுப்பு மூலிகைகளுடன் ஊர் வலமாக சென்று தீர்த்தான் ஊரணியில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.  இந்த பழக்கம் பன்நெடுங் காலமாக உள்ளது. அதனால் காலங்கள் மாறினாலும் கலாச்சாரத்தை மாற்ற விரும்பாமல் கிரா மத்தினர் இந்த வழிபாட்டை செய்து வரு கிறோம். வெளியூர், வெளிநாடுகளில் வசிப்பவர்களும் இந்த நாளில் சொந்த ஊருக்கு வந்துவிடுவார்கள்” என்றனர்.
கும்மி
சுமார் பலநூறு ஆண்டுகள் பழமை யான பாலை மரத்தடியில் பெண்களும், பெண் குழந்தைகளும் கூடி கும்மியடிப்பது டன் பாலை மரத்தை தெய்வமாக வணங்கி  படையலிட்டு, அதன்பிறகு ஊர்வலமாக சென்று, தீர்த்தான் ஊரணி கரையில் வழி பட்ட பிறகு வீட்டிற்குச் சென்று விரதம் முடிக்கின்றனர்.