புதுக்கோட்டை, மார்ச் 13- தமிழ்நாடுஅரசு அனைத்து மருந்தாளுநர்கள் சங்கத்தின் மாநில செயற் குழுக் கூட்டம் புதுக்கோட் டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் வே.விஜயகுமா ரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் வள்ளி யப்பன் வரவேற்றார். பொதுச் செயலர் பூ.சண்முகம், பொருளாளர் ஹேமலதா ஆகியோர் அறிக்கைகளைத் முன்வைத்தனர். அரசு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் ஜபருல்லா, மாவட்டச் செய லர் ரெங்கசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 1350-க்கும் மேற்பட்ட மருந்தா ளுநர் பணியிடங்களை, மருத் துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப வேண் டும். 39 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தா ளுநர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும். 46 மருந்துக் கிடங்குகளில் தலைமை மருந்தாளுநர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.