புதுக்கோட்டை, ஏப்.9- புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே ஒடுகம்பட்டி மேட்டுப்பட்டியில் உள்ள பிடாரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி கடந்த 7-ஆம் தேதி இரவு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது, இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒடுகம் பட்டியைச் சேர்ந்த நூர்முகமது மகன் முகமது யாசி னுக்கு(21) காயம் ஏற்பட்டது. கீரனூர் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்ட இவரைப் பார்க்கச் சென்ற ஒடு கம்பட்டியைச் சேர்ந்தவரும், தனியார் வங்கி உதவி மேலாளருமான கே.விக்னேஸ்வரனை(28) ஒ.பள்ளத் துப்பட்டியைச் சேர்ந்த ஒரு கும்பல் வழி மறித்து குத்திக் கொலை செய்தது. இது குறித்து ஒ.பள்ளத்துப்பட்டியைச் சேர்ந்த ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்த கீரனூர் காவல்துறை யினர், கே.ராமலிங்கம்(48), ரஞ்சித்(33) ஆகியோரை கைது செய்தனர். இதற்கிடையில் காவல் துறையிடம் அனுமதி பெறாமல் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்திய தாக ஒடுகம்பட்டியைச் சேர்ந்த வி.சண்முகம், எஸ்.ரங்க சாமி, எஸ்.கருப்பையா, ஆர்.ராமலிங்கம், ஒ.பள்ளத்துப் பட்டி, எஸ்.ராஜ்குமார் ஆகியோர் மீது கீரனூர் காவல் துறையினர் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.