districts

வீடுகளை கட்டாமல் கட்டியதாக முறைகேடு நடவடிக்கை கோரி வி.தொ.ச ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை,  மார்ச் 19 - புதுக்கோட்டை மாவட் டம் அரிமளம் ஊராட்சி நெடுங்குடி ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டம் மற்றும் அரசு வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டாமல் கட்டியதாகவும், ஏழை களுக்கு இலவச கழிப்பறை கள் கட்டாமல் பெரும் ஊழல் செய்த அரசு அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு அகில இந்திய விவ சாய தொழிலாளர்கள் சங்கம்  சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. நெடுங் குடி கிளை செயலாளர் சுசி. கணேசன் தலைமை வகித் தார்.  விதொச மாநில பொரு ளாளர் எஸ்.சங்கர் கண்டன  உரையாற்றினார். போராட் டத்தில் விதொச மாவட்டப் பொருளாளர் க.சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர் எம்.சண்முகம், சிபிஎம் அரி மளம் ஒன்றிய செயலாளர் ஆர்.வி.இராமையா, மாவட்ட  நிர்வாகிகள் எம்.ஜோஷி, செந்தமிழ் செல்வன், அடைக் கன், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் எம். அடைக்கப்பன் உள்ளிட் டோர் விளக்கவுரையாற்றி னர். இறுதியாக, புதுக் கோட்டை மாவட்ட ஆட்சி யரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

;