districts

img

விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறையை உருவாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, மார்ச் 16-  தமிழக அரசு விவவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை உள்ளிட்ட நெருக்கடியால் தள்ளப்பட்டுள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு கேரள அரசைப் போல கூலியை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு விவசாயத் தொழிலாளர்களுக்கு தனித்துறையை உருவாக்க வேண்டும். வீடின்றி தவிக்கும் ஏழைகளுக்கு மனைப்பட்டா, இலவச வீடு வழங்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சிராப்பள்ளி,புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் கே.சண்முகம், மாநிலப் பொருளாளர் அ.பழநிசாமி, நிர்வாகிகள் எம்.சண்முகம், கே.சித்திரைவேல், எஸ்.பெருமாள், பி.ராமசாமி, ஆர்.சக்திவேல், எம்.ஜோதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆர்.பிரதீப்ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநிலத் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.சின்னதுரை, மாநிலக்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி, மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, மாவட்டப் பொருளாளர் சி.நாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், என்.குருசாமி, சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், அன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் செந்தில்குமார், மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருவாரூர்: திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆர்.குமரராஜா தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்டச் செயலாளர் பி.கந்தசாமி, மாவட்டத் துணைத் தலைவர் எம்.கலைமணி, மாவட்டப் பொருளாளர் ஆறு.பிரகாஷ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அவுரி திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.முருகையன், மாவட்டத் தலைவர் கே.சித்தார்த்தன், மாவட்டப் பொருளாளர் கே.செந்தில்குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் அ.முருகேசன் தலைமை வகித்தார்.  மாவட்டச் செயலாளர் அ.கலையரசி, ஒன்றியச் செயலாளர்கள் வீரசிங்கம், குமார், அர்ச்சுனன், கோவிந்தராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், ஒன்றியச் செயலாளர்கள் சி.செல்லமுத்து, எம்.செல்லதுரை,  சிஐடியு மாவட்டத் தலைவர் அ.ரெங்கநாதன், எம்.கருணாநிதி ஆர்.கோகுலகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.