பொன்னமராவதி. டிச.8- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள காரையூரில் சட்டவிரோதமான முறையில் தனிநபர் ஆக்கிர மிப்பில் உள்ள 10 ஏக்கர் நிலங்களை அரசு மீட்டு அப்பகுதியில் நிலம் இல்லாத ஏழை விவசாயிகளுக்கு வழங்கக் கோரி விவசாய தொழி லாளர்கள், விவசாயிகள், மாதர் சங்கங்களின் சார்பில் காரையூர் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விதொச ஒன்றியச் செயலாளர் பி.ராமசாமி தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன், விச ஒன்றியச் செயலாளர் பாண்டி யன், மாதர் சங்க ஒன்றியச் செயலா ளர் மதியரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக் குழு உறுப்பினர் நல்லதம்பி, விதொச ஒன்றியத் தலைவர் பழனியப்பன் உள்ளிட்டோர் விளக்கிப் பேசி னர். விதொச மாநிலக் குழு உறுப்பி னர் கே.சண்முகம் நிறைவுரை யாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், விவசாயி கள் சங்க ஒன்றிய தலைவர் ராம சாமி, மாதர் சங்க ஒன்றிய தலைவர் ரேவதி மற்றும் நிர்வாகிகள் பங்கேற் றனர்.