நாகர்கோவில், ஏப்.11- அரசு ரப்பர் கழகம் மணலோடை கோட்டம் மணலோடை பிரிவு தொழிலா ளர்களின் பணிமூப்பு பட்டியல் 2014-ல் இறுதிப்படுத்தப்பட்டது. தற்பொழுது கோட்ட நிர்வாகம் ஒரு தலைபட்சமான முறையில் பட்டியலில் மாற்றம் செய்து தனது விருப்பு வெறுப்புகளை காண்பித்துள்ளது. பட்டியலில் பின்னால் இருப்பவரை முன்னால் பதிவு செய்து மாற்றம் செய்ததால் உண்மையான பணிமூப்புதாரர்கள் பாதிப்படையும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதை சரிசெய்ய தொழிற்சங்கம் , தோட்ட நிர்வா கத்திடம் தெரிவித்தும் தவறை திருத்தம் செய்யப்படவில்லை. எனவே, 2014 பணிமூப்பு பட்டியலை அடிப்படையாக வைத்து செயல்பட அரசு ரப்பர் கழகம் நிர்வாகத்தை வலியுறுத்தி 11.04.2023 முற்பகல் 11 மணிக்கு மண லோடை கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு சிஐடியு கன்வீனர் ஜி.ஜெலஸ்டின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கன்னியாகுமரி மாவட்ட தோட்டத் தொழிலாளர் சங்க (சிஐடியு) உதவி தலைவர் ஏ.வேலப்பன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். லாரன்ஸ், சசிகுமார், மகாதேவன் ஆகியோர் பேசினர். போ ராட்டத்தை முடித்து வைத்து சங்க தலை வர் பி.நடராஜன் பேசினார். கோரிக்கைக ளை வலியுறுத்தி சங்கு ஊதி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.