districts

img

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நாகைமாலி எம்எல்ஏ திறந்து வைத்தார்

நாகப்பட்டினம், நவ.25- நாகப்பட்டினம் மாவட் டம் ஆபரணதாரி ஊராட்சி யில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை  நீர்த்தேக்க தொட்டியை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி திறந்து வைத்தார்.  நாகப்பட்டினம் மாவட் டம் கீழ்வேளூர் சட்ட மன்றத்திற்குட்பட்ட ஆபரண தாரி (ஆவராணி) ஊராட்சி யில் சட்டமன்ற உறுப்பின ரின் தொகுதி  மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி கட்டப் பட்டது.  மக்களின் கோரிக் கையை ஏற்று உடனடியாக அப்பகுதியில் நீர்த்தேக்க தொட்டியை அமைத்து தந்த கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலிக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர். நிகழ்வில், திமுக ஒன்றி யச் செயலாளர் வடவூர் க.ராஜேந்திரன், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கே.செந்தில்குமார், ஆலங் குடி ஊராட்சி மன்ற தலை வர் என்.வடிவேல், விச ஒன்றி யத் தலைவர் எஸ்.என்.ஜீவாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.