தேனி, பிப்.13- தேனி மாவட்டம் சின்னமனூரில் நக ரின் மையப் பகுதியான எள்ளுக் கட்டை தெருவில் அரசு மதுபானக் கடை செயல் பட்டு வந்தது 50-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் பள்ளிக்கூடம், புகழ்பெற்ற பெற்ற சிவகாமி அம்மன் கோவில் மற்றும் விவ சாய நிலங்களுக்குச் செல்லும் சாலையாக இந்தச் சாலை உள்ளது. டாஸ்மாக் கடை யை ஒட்டி கோவிலும் கடையின் முன் பகுதி யில் கிறிஸ்தவ வழிபாட்டுத்தலமும், அத னுள்ளே ஆரம்பப் பள்ளிக் கூடம் செயல் பட்டு வந்தது. மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் வணிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் . டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய் யக் கோரி கடந்த 2022-ஆம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் அந்தக் கடை முன்பாகக் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பாலபாரதி கலந்துகொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்பொழுது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் டாஸ்மாக் கடையை மூன்று மாதத்திற்குள் வேறு இடத்திற்கு மாற்றுவதாக வட்டாட்சியர் மற்றும் டாஸ்மாக் மேலாளர் ஆகியோர் எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தனர் .
எனினும் உறுதியளித்தபடி கடையை இடமாற்றம் செய்யாத நிலையில் நினை வூட்டல் மனுக் கொடுக்கப்பட்டது. ஆனா லும் டாஸ்மாக் நிர்வாகம் செவிசாய்க்க வில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த ஜன வரி 18-ஆம் தேதி கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பாலபாரதி தலைமை யில் காத்திருக்கும் போராட்டம் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 19-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் மற்றும் டாஸ்மாக் மேலாளர் ஆகியோருடன் நடத் திய பேச்சுவார்த்தையில் 15-நாட்களுக்குள் கடையை இடமாற்றம் செய்ய உறுதியளித் தனர். எனினும் மாவட்ட ஆட்சியர் உறுதி யளித்தபடி கடையை இடமாற்றம் செய்ய வில்லை. தேனி மாவட்ட நிர்வாகம் கொடுத்த வாக்குறுதிப்படி இடமாற்றம் செய்ய வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தேனி ஆட்சியர் ஆர்.வீ.ஷஜீவ னாவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து சனிக்கிழமை டாஸ்மாக் மதுக்கடை மூடப்பட்டது. தொடர் போராட்டம் நடத்தி கடையைப் பூட்டச் செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நடவடிக்கை எடுத்த ஆட்சி யருக்கும் அந்தப் பகுதி வணிகர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.