தேனி, பிப்.13- தேனி அருகே உள்ள பூதிப்புரத்தை சேர்ந்த கேரள புத்திரன் என்பவர் தேனியிலிருந்து பூதிப்புரம் செல்லும் முக்கி யச் சாலை பல ஆண்டுகளாகப் பழுதடைந்து உள்ளது .இத னால் விபத்துகள் ஏற்படுகிறது .பலமுறை மனு அளித்தும் சாலையைச் செப்பனிடவில்லை எனக் கூறி திருவோடு ஏந்தி தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பிச்சை எடுத்தார் .அவரைக் காவல்துறையினர் கைது செய்து பின்னர் அனுப்பி வைத்தனர்.