தூத்துக்குடி,ஏப். 10 ஆட்சியர் அலுவலகத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம், மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா, விளாத்தி குளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன், ஶ்ரீ வைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்த ராஜ், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், மாநகராட்சி ஆணையர் சரன்யா, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ண பிரான், தூத்துக்குடி வட்டாட்சியர் ஜஸ்டின் செல்லதுரை, திமுக மாநகர் செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பி னர் கனிமொழி கருணாநிதி. விளிம்பு நிலை மக்களான 52 நரிக்குறவர்களுக்கு இலவச பட்டா வழங்கினார், மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதன் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் வாங்கிய ரூ.33 லட்சம் மதிப்பிலான மோட்டர் பொருத்தப்பட்ட 2 கழிவு நீரை உறிஞ்சும் வாகனத்தைக் கொடி அசைத்துத் துவக்கி வைத்தார்.