திருவாரூர், ஜன.18- இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றி யம் திருமீயச்சூர் கிளை சார் பில் தை பொங்கலை முன் னிட்டு 51-ஆம் ஆண்டு இளை ஞர் பெருவிழா விளையாட்டு போட்டி மற்றும் கருத்தரங் கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய பொருளாளர் பாலச்சந்தர் தலைமை வைத்தார். ஒன்றி யச் செயலாளர் கே.எம்.பாலா வெண்கொடியை ஏற்றினார். தியாகி ஜெ.நாவலன் நினை விடத்தில் இருந்து புறப்பட்ட சுடர் பயணத்தை மாவட்டப் பொருளாளர் எம்.டி.கேசவ ராஜ் துவக்கி வைத்தார். தோழர் கே.ஜோதிபாசு நினை வாக அமைக்கப்பட்ட மேடை யில் ஒலிம்பிக் நினைவு சுடரை மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சலாவுதீன் பெற்றுக் கொண்டார். பிடிஏ தலைவர் ஆர்.மேக நாதன் விளையாட்டு போட்டி யை துவக்கி வைத்தார். திரு மீயச்சூர் ஊராட்சி பள்ளியில் 6,7,8 வகுப்பில் முதல் மதிப் பெண் பெற்ற மாணவர் களுக்கு எஸ்.சபாபதி மோகன் பரிசுகளை வழங்கினார். ‘‘இன்றைய அரசிய லில் இளைய தலைமுறை யினரின் எதிர்பார்ப்பும், எதார்த்தமும்’’ என்ற தலைப் பில் தமுஎகச மாநிலத் தலை வர் மதுக்கூர் இராமலிங்கம் உரையாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம், மாவட்டக் குழு உறுப்பினர் டி.வீர பாண்டியன், மாவட்ட கவுன் சிலர் ஜெ.முகமது உதுமான், ஒன்றியக் குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர்.