திருவாரூர், மார்ச் 10- கடந்த 4 ஆண்டுகளாக வெளியிடப் படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டிய லை உடன் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு வியாழக்கிழமை ஒரு மணி நேரம் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் எஸ்.மகேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தா.விஜய் ஆனந்த், மாநிலப் பொருளாளர் வெ.சோம சுந்தரம், அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் செ.செங்குட்டுவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.