districts

தொகுப்பூதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றக்கோரிக்கை

திருவள்ளூர், நவ 20- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட பேரவை சனிக்கிழமை (நவ 19) அன்று திருவள்ளூரில் மாவட்ட தலைவர் க.திவ்யா தலைமையில் நடை பெற்றது.  திருவள்ளூர் வட்டச் செயலாளர் ப.கஜேந்திரன் வரவேற்றார்.மாநில செயலாளர் ஆ.அம்சராஜ் துவக்கவுரை யாற்றினார். மாவட்ட செயலாளர் ஆர்.பாண்டுரங்கன் வேலை அறிக்கையை முன்மொழிந்தார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.காந்திமதிநாதன், வரு வாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.மணிகண்டன், தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மு.ஜம்பு, ஓய்வூதிய சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோ.இளங்கோவன் உட்பட்ட பலர் வாழ்த்திப் பேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் உ.சுமதி மாநாட்டை முடித்து வைத்துப் பேசினார். மாவட்ட மகளிர் துணைக் குழு நிர்வாகி சுகன்யா நன்றி கூறினார்.
 தீர்மானங்கள்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், திருவள்ளூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்,  ரயில் நிலையம் முதல் மாவட்ட ஆட்சியர் வளாகம் வரை காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும், தமிழக அரசின் அரசாணை 115 ரத்து செய்ய வேண்டும்,  சாலை பணியாளர்களின் 41 மாத பணிக்காலத்தை முறைப்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள்
சங்கத்தின் மாவட்ட தலைவராக க.திவ்யா, மாவட்ட செயலாளராக கௌ.மெல்கிராஜாசிங், பொருளாளராக க.வெண்ணிலா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.