districts

img

உள்ளூரிலேயே 100 நாள் வேலை கேட்டு விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

 திருவள்ளூர், ஆக 18- எல்லாபுரம் ஒன்றியம் பூரிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுராகண்டிகை கிராமத்தில் உள்ளூரிலேயே 100 நாள் வேலை வழங்க வேண்டும், அதிகாலையில் பணிக்கு செல்ல வேண்டும் என நிர்பந்தம் செய்வதை தவிர்க்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில்  வியாழனன்று (ஆக 18) அன்று எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு   ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்திற்கு வட்டச் செயலாளர் பி.அருள் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் ஏ.ஜி.கண்ணன், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பி னர் டி.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின்,  அடுத்த வாரத்தி லிருந்து உள்ளூரில் வேலை  வழங்கப்படும் என உறுதி யளித்ததன் அடிப்படையில் போராட்டம் கைவிடப் பட்டது.

;