districts

தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற நடவடிக்கை

திருவள்ளூர்.பிப்.24- திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம அளவில் ஒட்டுமொத்த வளர்ச்சியை எட்டும் வகையில் தரிசு நிலங்களை கணக்கெடுத்து அதனை விளைநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  விவசாயிகளுக்கு தொடர்ந்து வருமானம் தரக்கூடிய வகையில், குறைந்த நீரில் அதிக வருமானம் தரக்கூடிய தோட்டக்கலை பழ மரப் பயிர்களும், ஊடுபயிராக சிறு தானியங்கள், பயறு வகைகள், எண்ணை வித்து பயிர்களையும் சாகுபடி செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக  கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 141 கிராமங்களில் 173.6 ஏக்கர் தரிசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ரூ.7.09 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.  கிராமங்களில் உள்ள ஏரி, குளம், வரத்து கால்வாய்களை தூர்வாரு தல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், ஆதிதிராவிட, பழங்குடியின விவசாயிகளுக்கு தனிப்பட்ட முறையில் மின் இணைப்பு டன் ஆழ்துளைக் கிணறு அமைத்தல் போன்ற பணிகள் 100  விழுக்காடு  மானியத்தில் மேற்கொள்ளப் படுகின்றன.  கடம்பத்தூர் ஒன்றியத்தில் திரு மணிக்குப்பம் ஊராட்சியில் விவ சாயிகள் பயன்பெறும் வகையில் 11.72 ஏக்கர் தரிசு நிலம் கண க்கெடுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இந்த பணிகளை தமிழ்நாடு  அரசின் திட்ட கண்காணிப்பு அலுவலரும், நுகர்பொருள் வாணிபக்கழக ஆணையருமான வி.ராஜாராம் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.   இதைத்தொடர்ந்து தரிசு நிலத் தொகுப்பு பகுதியில் வேளாண்மை பொறியியல் துறையினரால் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக் குட்டையை பார்வையிட்டார்.  இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர்  ரிஷப் பந்த், வேளாண்மை இணை இயக்குநர் எல்.சுரேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.