districts

மாணவி ஸ்ரீமதி மரணம் அண்ணாமலை கருத்து தெரிவிக்காதது ஏன்? கே.எஸ்.அழகிரி

திருவண்ணாமலை, ஆக. 31- கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி  மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்து தமிழக பாஜக தலை வர் அண்ணாமலை இது வரை கருத்து தெரிவிக்கா தது ஏன்? என தமிழ்நாடு  காங்கிரஸ்  கமிட்டித் தலை வர் கே.எஸ்.அழகிரி கேள்வி  எழுப்பியுள்ளார். கனியாமூர் பள்ளி மாணவி மரணத்திற்கு மட்டும் ஏன் அவர்கள் கருத்து தெரிவிக்கவில்லை, கண்டனம் தெரிவிக்க வில்லை, முறையான நீதி விசாரணை வேண்டும் எனக் கேட்கவில்லை. எதற்காக அவர்கள் நீதிமன்றம் செல்லவில்லை? ஒரு கிறிஸ்தவ பள்ளி யில் படித்த ஒரு குழந்தை மரணம் எய்தியதற்காக உச்ச நீதிமன்றம் வரை சென்றார்கள். அந்த குழந்தை விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டியவர்கள், கள்ளக்குறிச்சி மாணவி விஷயத்தில் ஆர்வம் காட்டாததன் மர்மம் என்ன? எதற்காக பாஜகவினர் இவ்வாறு நடந்து கொள் கிறார்கள்? எதற்காக ஆர்எஸ்எஸ் மவுனமாக இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.

;