districts

img

சிபிஎம் போராட்டம் எதிரொலி கடலாடி மக்களுக்கு மாற்று இடம்

திருவண்ணாமலை,செப்.23- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டம், கடலாடி கிரா மத்தில் நீர்நிலைப் பகுதி யில் குடியிருப்பதாக சொல்லி, நீண்ட காலமாக அங்கு குடியிருந்து வரும் மக்க ளின் வீடுகளை அகற்றும் முயற்சியில் வருவாய் துறை மற்றும் பொதுப்பணி துறையினர் ஈடுபட்டனர். அகற்றப்படும் வீடுகளில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.  இதையடுத்து வெள்ளி யன்று (செப். 23) கடலாடி பகுதியில் வீடுகள் அகற்றிய குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. முதல் தவணையாக 6 குடும்பத்திற்கு பட்டா வழங்கினர். இந்த நிகழ்ச்சி யில் கலசப்பாக்கம் வட்டார செயலாளர் பி. சுந்தர், கிளைச் செயலாளர்கள் சாமிகண்ணு, ஜே.ஆதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

;