districts

ஏடிஎம் கொள்ளை:   மேலும் ஒருவர் கைது

திருவண்ணாமலை, மார்ச் 14- திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர் ஆகிய பகுதிகளிலுள்ள ஏடிஎம் மையங்களில் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி இயந்திரங்களை உடைத்து மர்ம நபர்கள் 72 லட்சத்து 79 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். பின்னர், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன் உத்தரவுப்படி 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இச்சம்பவத்தில், வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதும், கர்நாடகா மாநிலம் கோலார் பகுதியில் தங்கியிருந்ததும் தெரிய வந்தது. பின்னர், வெளிமாநிலங்களுக்கு சென்ற தமிழ்நாடு காவல்துறையினர் 5 பேர் கைது ரூ. 5 லட்சம் பணத்தையும், இரண்டு கார்களையும் கைப்பற்றிய நிலையில், மார்ச் 14 அன்று இவ்வழக்கில் தொடர்புடைய ராஜஸ்தானை சேர்ந்த சிராஜூதின் (50) என்பவரை கர்நாடகா மாநில எல்லையருகே தனிப்படையினர் கைது செய்து கொள்ளைக்கு பயன்படுத்திய கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.

;