districts

img

நலவாரிய நிதியை தொழிலாளர்கள் நலனுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் சிஐடியு மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜன.3 - கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். சாலையோர வியாபாரி களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். ஆன்லைன் பதிவு குளறு படிகளை சரி செய்ய வேண்டும். மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும். ஆன்லைன் அப ராதத்தை ரத்து செய்ய வேண்டும். நல வாரியத்தில் நேரடி பதிவை துவங்க வேண்டும்.  நல வாரியத்தில் பதிவு செய் துள்ள அனைத்து தொழிலாளர் களுக்கும் பொங்கல் போனஸ் வழங்கிட வேண்டும். தையல் கடை களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும். வங்கியில் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் டீசல், பெட்ரோல் வழங்க வேண்டும். விபத்து மர ணத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.  ஓய்வூதியம் குறித்த விசாரணை யை உடனே நிறுத்த வேண்டும். ஓய்வூதியம் ரூ.3000 வழங்க வேண்  டும். சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும். வீடு வழங்கும் திட்டத்தை எளிமையாக்க வேண் டும். ஆதார் ஓடிபி-ஐ கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு பண பயன்களை காலதாமதமின்றி வழங்க வேண்டும். நலவாரியத் தில் உள்ள நிதியை தொழிலாளர் நலன்களுக்கு மட்டுமே பயன்  படுத்த வேண்டும்.

காலாவதி யான சுங்க சாவடிகளை அப்புறப்  படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு தொழிற்சங்கத்தி னர் செவ்வாய்க்கிழமை மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் கரும்பு, பொங்கல் பானையுடன் நூதன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். கட்டுமான சங்க  மாவட்டச் செயலாளர் சந்திரசேக ரன் தலைமை வகித்தார். ஆர்ப் பாட்டத்தை விளக்கி சிஐடியு மாந கர் மாவட்ட செயலாளர் ரெங்க ராஜன், மாவட்ட பொருளாளர் மணி கண்டன், தரைக்கடை வியாபாரி கள் சங்க மாவட்ட செயலாளர் செல்வி, சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் சந்திரன், சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், கட்டுமான சங்க புறநகர் மாவட்ட செயலாளர் பூமாலை ஆகியோர் பேசினர். கட்டுமான சங்க மாவட்ட பொருளாளர் உலகநாதன் நன்றி கூறினார்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட நல வாரிய  அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழி லாளர் சங்கம், சுமை பணி தொழி லாளர்கள் சங்கம், ஆட்டோ தொழி லாளர்கள் சங்கம், மற்றும் தையல் கலை தொழிலாளர் சங்கம் உள் ளிட்ட அமைப்புகளை சார்ந்த 300-க்கும் மேற்பட்டோர், மாவட்ட தலைவர்கள் டி.வீரபாண்டியன், கே.செல்வம், பி.நடராஜன் மற்றும் மாவட்ட செயலர் இரா.கோமதி தலைமையில் பங்கேற்றனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்ட துணை தலைவர் கே.ஜோதிபாசு, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் என்.அனிபா, சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் கே. கஜேந்திரன், மாவட்டத் துணை செயலாளர் என்.லெனின், கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் டி.ரமேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்
கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தஞ்சாவூர் ரயிலடி அருகில், மாவட்டத் தலைவர் ஏ. சின்னையன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் சிறப்புரையாற்றினார். அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்க ஒருங்கி ணைப்பாளர் என்.குருசாமி, கட்டு மான சங்க மாவட்டச் செயலாளர்  இ.டி.எஸ்.மூர்த்தி, சிஐடியு மாவட்டப் பொருளாளர் பி.என். பேர்நீதி ஆழ்வார், மாவட்ட துணைத் தலைவர் து.கோவிந்தராஜ் ஆகி யோர் உரையாற்றினர்.
அரியலூர்
இந்திய கட்டுமான தொழிலா ளர்கள் சங்கத்தின் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டக் குழு சார்பில் அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் பி. துரைசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே. கிருஷ்ணன், பொருளாளர் கே.கண்  ணன், துணைத் தலைவர் ஆர்.சிற்  றம்பலம் உள்ளிட்டோர் பேசினர்.