பாபநாசம், ஜூன் 14-
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அடுத்த ராஜகிரி ஊராட்சியில் நடந்து வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சங்கர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
மேலும் பள்ளி கட்டடப் பணிகள், அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் ஆகிய வற்றையும் பார்வையிட்டார்.
ஆய்வின் போது, ராஜகிரி ஊராட்சி மன்ற உறுப்பினர் முபாரக் ஹீசைன், ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், ஊரக வேலைவாய்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளர் அய் யப்பன் மற்றும் பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.