தஞ்சாவூர், ஜூலை 23- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு மருத்துவமனை முன்பு நெடுஞ்சா லைத்துறைக்கு சொந்தமான இடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக, கோயிலை விரிவுபடுத்தக் கூடாது என அனைத்துக் கட்சி சார்பில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளரிடம் மனு அளிக்கப் பட்டுள்ளது. அம்மனுவில், “பேராவூரணி அரசு மருத்து வமனை சுற்றுச்சுவருக்கு முன்னால் வாடகை கார் மற்றும் வேன் நிறுத்தும் இடம் நெடுஞ் சாலையில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் சிறிய ஓட்டுக் கொட்டகை யில் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் தங்கி வாடகை வாகனங்களை இயக்கி வந்தனர். இதில் ஒரு பிள்ளையார் சிலை வைத்து இருந் தனர். இது பேராவூரணி நகரின் மையப் பகுதியில், சென்டர் மீடியாவுடன் இருபக்க சாலையாக மாறியவுடன் போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக தற்போது உள்ளது. திடீரென கடந்த 21.7.2024 (ஞாயிறு) அன்று இந்த கோவிலைச் சுற்றி பில்லர் குழி வெட்டி சாலையில் கான்கிரீட் அமைத்து கம்பி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்தில் பெரிய அளவில், சாலையிலேயே பில்லர் அமைத்து கோவில் கட்டடம் கட்டினால் போக்குவரத் திற்கும் பொதுமக்களுக்கும், தினசரி அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக் கும் மிகவும் இடையூறாக இருக்கும். மேலும், நெடுஞ்சாலையில் கோவில் கட்டுவதை தாங்கள் அனுமதிக்கக் கூடாது. இதனைத் தடுத்து நிறுத்தி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என” கூறப்பட்டு உள்ளது. மனுவில், திராவிடர் விடுதலைக் கழகம் சித.திருவேங்கடம், அறநெறி மக்கள் கட்சி த.ஜேம்ஸ், தமிழ் வழிக் கல்வி இயக்கம் நா.வெங்கடேசன், தமிழக மக்கள் புரட்சிக் கழகம் இரா.மதியழகன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வே.ரெங்கசாமி, ஆர்.எஸ்.வேலுச் சாமி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்.மூர்த்தி, மதிமுக குமார், விடுதலை சிறுத்தை கள் கட்சி க.ப.அரவிந்த குமார், மனித நேய ஜனநாயகக் கட்சி முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இயக்கங்க ளின் நிர்வாகிகள் கையெழுத்திட்டுள்ளனர்.