பொன்னமராவதி, டிச.9 - ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதால் மின் இணைப்பு இல்லாமல் தவிக் கும் குடும்பம். இதில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு மென கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா காரையூர் அருகே உள்ள கொன்னையம்பட்டி ஊராட்சி மேட்டுப்படியை சேர்ந்தவர் வெள்ளை கண்ணு (50). இவரது மனைவி இந்திராமதி. இவர் களுக்கு 3 மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். மகள்கள் தேன்மொழி 10 ஆம் வகுப்பு, சத்யா 8 ஆம் வகுப்பு, யோகேஸ்வரி 5 ஆம் வகுப்பு மற்றும் மகன் சுரேஷ் 9 ஆம் வகுப்பு படிக்கின்றனர். ஒன்றரை ஆண்டு களுக்கு முன்பு மனைவி இந்திராமதி இறந்த நிலை யில், நான்கு குழந்தை களையும் வெள்ளைகண்ணு வளர்த்து வருகிறார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன், மின்விளக்கு ஒன்று கூடுத லாக பயன்படுத்தப்படுவ தாக வந்த புகாரையடுத்து, மின்வாரிய அலுவலர்கள் அபராதத்துடன் மின் இணைப்பை துண்டித்தனர். அதிகாரிகள் விதித்த அப ராதம் மற்றும் புதிய மின் மீட்ட ருடன் இணைப்பு வழங்க கோரி பணம் கட்டி தற்போது வரை காத்திருக்கிறார் வெள்ளைகண்ணு. இடத்தகராறில் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட வெள்ளைகண்ணுவுக்கு மின் இணைப்பு வழங்கக் கூடாது என ஊரிலிருந்து மின்வாரிய அதிகாரி களுக்கு அழுத்தம் தருவ தாக கூறப்படுகிறது. இத னால் மின் இணைப்பு வழங்க தயாராக இருந்த மின்வாரி யம், மேற்கண்ட ஊரில் உள்ள சிலரின் எதிர்ப்பு கார ணமாக மின் இணைப்பு கொடுக்காமல் தாமதப்படுத் துகிறது. வீட்டில் மின் இணைப்பு இல்லாததால், பள்ளிப் பாடங் களை படிக்க முடியாமல், குழந்தைகள் 4 பேரும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டி லேயே முடங்கியுள்ளனர். தங்களுக்கு மின் இணைப்பு தரவிடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் இணைப்பு வழங்கி, மீண்டும் படிப்பை தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோ ரிக்கை வைத்து காத்திருக் கின்றனர் வெள்ளைகண்ணு வின் குழந்தைகள். பொன்னமராவதி தாலு காவில், சட்டத்திற்கு புறம் பாக பல்வேறு காரணங் களுக்காக ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் சம்பவம் தொடர் கதையாக உள்ளது. இதில் தமிழ்நாடு அரசு உரிய கவனம் செலுத்தி நட வடிக்கை எடுக்க வேண்டும்.