districts

நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணிகளை தரமானதாக அமைக்க ஆட்சியர் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை, அக்.15 - மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்ட அரங்கில் நெடுஞ்சாலைத்துறை மூலம்  நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக மாவட்ட  ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவ லர் சோ.முருகதாஸ், ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குநர் முருகண்ணன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா  மற்றும் வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, இந்துசமய அறநிலையத்துறை ஆகிய துறையைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசுகை யில், தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்து  சாலைகளையும் தரமாகவும், விரைவாகவும்  முடிக்க அறிவுறுத்தினார். அதன்படி மயிலாடு துறை மாவட்டத்தில் குறிப்பாக நெடுஞ்சா லைத்துறை மூலம் நடைபெற்று வரும் பணி களை விரைந்து முடிக்க வேண்டும். நமது மாவட்டத்தில் சென்னை - கன்னியாகுமரி சிறப்பு திட்டத்தின் கீழ் பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார். மாதிரிமங்கலம், முடிகண்டநல்லூர் இணைப்பு சாலை, சீர்காழி திருமுல்லை வாசல் சாலை பணி, கதிராமங்கலம் ஆகிய  இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணிக்கு அரசுக்கு சொந்தமாக உள்ள வரு வாய்த் துறையைச் சார்ந்த இடம், இந்து சமய அறநிலையத்துறையை சார்ந்த இடம், கையகப்படுத்துவது தொடர்பாக எடுக்கப் பட்ட பணிகள் குறித்தும் முன்னேற்றம் குறித்தும் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகிய துறையைச் சார்ந்த அலுவலர்களிடம், தங்களின் துறைகளில் சாலை பணிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். குறிப்பாக சாலை பணிக்கு அரசு நிலம் கையகப்படுத்தும் போது அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.

;