districts

ஆன்-லைன் ரம்மிக்கு தடை விதிக்க குழு அமைப்பு பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா வரவேற்பு

பாபநாசம், ஜூன் 12 - மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினருமான  ஜவா ஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் ஆன்-லைன் ரம்மியால் பலர் பணத்தை இழப்பதும், தற்கொலை செய்து  கொள்ளும் சம்பவங்களும் தொடர் கதையாகி  வருகின்றன. பலரும் ஆன்-லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். மனிதநேய மக்கள் கட்சியும் ஆன்-லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டுமென வலுவாக கோரிக் கைகளை வைத்தது. இந்தியாவில் ஆன்-லைன் சூதாட்ட நிறு வனங்கள் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஈட்டிய வருமானம் ரூ.10,100 கோடி. நடப்பாண்டில் இது ரூ.15,400 கோடியாக அதிகரிக்கும் என்று  புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஆன்-லைன் சூதாட்ட வருமா னத்தில் குறைந்தது 20 விழுக்காடு தமிழ்நாட் டிலிருந்து பெறப்படுவதாகவும் தெரிகிறது.  2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 60-க்கும் மேற்பட்டோர் ஆன்-லைன் சூதாட்டத் தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர். அதன்பின் ஆன்-லைன் சூதாட்ட  தடைச் சட்டம் இயற்றப்பட்டதால், 10 மாதங்கள்  தற்கொலைகள் எதுவும் நிகழவில்லை. ஆனால் நீதிமன்றம், “ஆன்-லைன் சூதாட்டத் திற்கு விதித்த தடை செல்லாது” என்று அறிவித்ததற்குப் பிறகு தொடர்ச்சியாக 10 மாதங்களில் 22 பேர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலைக் கருத்தில் கொண்டு,  ஆன்-லைன் ரம்மிக்கு தடை விதிக்க, சட்டம் இயற்றுவது குறித்து பரிந்துரைக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்து, இரண்டு வாரத்திற்குள் தனது அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தமிழக மக்களின் நலனில் அக்கறைக் கொண்டு எடுக்கப்பட்ட நல்ல  முடிவாகும். மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில்  இதனை வரவேற்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;