அய்யம்பேட்டை, ஜூன் 29 - அய்யம்பேட்டை காவல்நிலையம், அரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை அய்யம் பேட்டையில் நடத்தின. அய்யம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் வனிதா தலைமையில் நடந்த போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி யில், பதாகைகளை ஏந்தி மாணவர்கள் பங்கேற்ற னர். அய்யம்பேட்டை அண்ணா சிலையில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதி களின் வழியாக சென் றது. இதில் பங்கேற்ற மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை பொது மக்களிடையே ஏற்படுத்தி னர். துண்டு பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட் டன. இதில் அரசுப் பள்ளியின் ஆசிரியர்கள், சிறப்பு காவல்துறை துணை கண்காணிப்பா ளர் லோகேஸ்வரன், அய்யம்பேட்டை காவல் நிலைய காவலர்கள் கலந்து கொண்டனர்.