districts

img

சிஐடியு திருவாரூர் மாவட்ட மாநாடு பேரணி - பொதுக்கூட்டம் எம்.சின்னதுரை எம்எல்ஏ பங்கேற்பு

மன்னார்குடி, அக்.9 - இந்திய தொழிற்சங்க மையத்தின் திருவா ரூர் மாவட்ட 9-வது மாநாடு மன்னார்குடி யில் துவங்கியது. மாவட்ட துணைச் செயலா ளர் எம்.கே.எம். ஹனிபா தலைமையில் துவங்கிய தொழிலாளர் செங்கொடி பேரணி,  மின் ஊழியர் மத்தி்ய அமைப்பின் கோட்ட  செயலாளர் வினோத் தலைமையிலான கோலாட்ட குழுவின் நிகழ்ச்சியோடு அணி வகுத்து மன்னார்குடி நகராட்சியிலிருந்து அம்பேத்கர் சிலை, பேருந்து நிலையம் வழி யாக நகரின் முக்கிய வீதிகளில் வந்தது.  பேரணியில் 1500-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் கலந்து கொண்டனர். பேரணி பந்தலடியை வந்தடைந்தவுடன், மாவட்ட தலைவர் இரா.மாலதி தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செயலாளர்கள் ஆர்.மோகன், எம். மகாலட்சுமி, மாவட்டச் செயலாளர் டி.முரு கையன், மாவட்டப் பொருளாளர் எஸ்.வைத்தியநாதன், வரவேற்புக் குழு தலைவர்  ஏ.கோவிந்தராஜ், செயலாளர் ஜி.ரகுபதி ஆகியோர் உரையாற்றினர்.  மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகரா ஜன் எழுதிய ‘மலரட்டும் மார்க்சீயம்’ என்னும்  நூலை கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை வெளியிட, மாநிலச் செயலாளர் எம்.மகாலட்சுமி பெற்றுக் கொண்டார். நிறைவாக சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை  சிறப்புரை யாற்றினார். வரவேற்புக்குழு பொருளாளர் அ.அரிகரன் நன்றி கூறினார். முன்னதாக மகாலிங்கம் குழுவினரின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. சட்டமன்ற  உறுப்பினர் எம்.சின்னத்துரை கலைக்குழு வில் பாடிய 9 வயது சிறுமி நவமித்ரா-விற்கு  நினைவுப்பரிசு வழங்கினார்.

;