districts

img

சீர்காழியில் ஆட்டோ ஓட்டுநர் சங்க புதிய கிளை அமைப்பு

மயிலாடுதுறை,  நவ.27 -  மயிலாடுதுறை மாவட் டம் சீர்காழியில் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் (சிஐடியு) தோழர் வி.பி.சிந்தன் நினைவு புதிய கிளை அமைக்கப்பட்டு ஆட்டோ நிலையம் திறக்கப் பட்டது.  சீர்காழி மணிகூண்டு அரு கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிஐடியு கிளை தலைவர் மகாலிங்கம்  தலைமை வகித்தார். கிளை செயலாளர் செல்வக்குமார், நிர்வாகிகள் சிவகுருநாதன், ஜெயக்குமார், செல்வ குமார், ராஜ்குமார் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.  கௌரவத்தலைவரும், ஓய்வு பெற்ற காவல் உதவி  ஆய்வாளருமான சுகுமார் வரவேற்றார். கார்-வேன்  ஓட்டுநர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.என்.டீ. ரமேஷ், சிஐடியு மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன், மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன், மாவட்ட துணை தலைவர்  ஆர்.ராமானுஜம், கார்-வேன் ஓட்டுநர் சங்க மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ், விஸ்வநாதன், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் வெங்கடேஷ், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.