districts

img

திரிபுராவில் சிபிஎம் ஊழியர்கள் மீது தாக்குதல் பாஜக குண்டர்களை கண்டித்து போராட்டம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 8-  திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள், அவர்களது வீடுகளை தாக்கி, தீயிட்டு கொளுத்திய பாஜக குண் டர்களையும், இதை கைகட்டி வேடிக்கை பார்க்கும் ஒன்றிய மோடி அரசையும் கண்  டித்து திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நகரக் குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் கே.கோபு தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ் முன் னிலை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர்
அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்  குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாவட்டக்  குழு உறுப்பினர் துரைசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சிற்றம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;