districts

img

மேமாத்தூர் துணை மின் நிலையத்தில் கூடுதல் திறன் கொண்ட மின்மாற்றி திறப்பு

மயிலாடுதுறை, நவ.7 -  மயிலாடுதுறை மாவட் டம் செம்பனார்கோயில் அரு கேயுள்ள மேமாத்தூர் துணை மின் நிலையத்தில் கூடுதல் திறன் கொண்ட மின்மாற்றி பயன்பாட்டிற்கு வரும் திறப்பு விழா  திங்க ளன்று நடைபெற்றது. மேமாத்தூர் கிராமத்தில் ஊழியர்களின்றி 33/11 கி.வாட் துணை மின் நிலை யம் கடந்த 2006 அன்று தொடங்கப்பட்டது. இந்த மின் நிலையம் மூலம் செம்ப னார்கோயில் பிரிவிற்கு உட்பட்ட ஆறுபாதி, மேமாத்  தூர் கீழ்மாத்தூர், திருச்சம்  பள்ளி, பரசலூர் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 5,600 மின்  நுகர்வோர்களும், சங்க ரன்பந்தல் பிரிவிற்குட்பட்ட நரசிங்கநத்தம், கூடலூர், நெடுவாசல் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 2,100 மின்  நுகர்வோர்களும் பயன டைந்து வருகின்றனர்.  இந்நிலையில் தற்போது மின் நுகர்வோர்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில், கூடுதலாக 8 எம்.வி.ஏ. திறன் கொண்ட மின்மாற்றி ஊழியர்கள் பணிபுரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் திறன் மின்  மாற்றியை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், சென்னை யில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.  இதற்கான நிகழ்ச்சிக்கு மின்வாரிய நாகை மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சசிதரன் தலைமை வகித்  தார். சீர்காழி கோட்ட பொறி யாளர் லதா மகேஸ்வரி, ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  சிறப்பு விருந்தினர்களாக மயிலாடுதுறை எம்பி ராம லிங்கம், பூம்புகார் எம்எல்ஏ  நிவேதா முருகன் ஆகி யோர் கலந்து கொண்டு கூடு தல் திறன் மின்மாற்றியை இயக்கி வைத்து பேசினர். தற்போது அமைக்கப் பட்டுள்ள மின்மாற்றி மூலம் செம்பனார்கோயில் பிரி விற்குட்பட்ட கீழ்மாத்தூர், திருச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 800 மின் நுகர்வோர்களுக்கு புதிய கீழ்மாத்தூர் மின் பாதை மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.