districts

img

ஆனந்ததாண்டவபுரம்-சேத்தூர் சாலையை சீரமைக்கக் கோரி சாலைமறியல்

மயிலாடுதுறை, மார்ச் 7- மயிலாடுதுறை அருகேயுள்ள  ஆனந்ததாண்டவபுரம் முதல் சேத்தூர் வரையிலான சாலை குண்டும்-குழியுமாக உள்ளது. இந்தச் சாலையை சீரமைக்கக் கோரி சேத்தூர் பிரதான சாலையில  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். ஒன்றியக்குழு உறுப்பினர் அ.ராஜேஷ்,  கிளைச் செயலாளர்கள் என்.நாகராஜ், என்.செல்வராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.துரைராஜ், ஒன்றியச் செயலாளர்  ஜி.ரவிச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சி.மேகநாதன், ஏ.அறிவழகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “தடம் எண் A-7 பேருந்தை தொடர்ச்சியாக சேத்தூர் பிரதான சாலை வரை இயக்க வேண்டும். கீழமருதாந்தநல்லூர், ஆனந்ததாண்டவபுரம், சேத்தூர் ஊராட்சிகளில் குடிமனைப் பட்டா கேட்டு மனுக் கொடுத்த அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டுமென” வலியுறுத்தினர்.

;