districts

img

ஆலங்குடி - மறமடக்கி பேருந்து புதிய வழித்தடம் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் துவக்கி வைத்தார்

புதுக்கோட்டை, ஜன.24 - புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடி முதல் மறமடக்கி வரை செல்லும்  புதிய வழித்தட பேருந்தை சுற்றுச்சூழல்  துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திங்கள்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  அப்போது அமைச்சர் பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது மக்களின் கோரிக்கைக்கேற்ப தேவைப் படும் இடங்களில் புதிய வழித்தடங்க ளில் அரசு பேருந்து வசதி இயக்கப்பட்டு  வருகிறது. அந்த வகையில் இன்றைய  தினம் ஆலங்குடி பேருந்து நிலையத் தில், ஆலங்குடி முதல் மறமடக்கி வரை செல்லும் புதிய வழித்தட பேருந்து வசதி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப் பேருந்து ஆலங்குடியிருந்து காலை  8.55 மணிக்கு புறப்பட்டு அரையப்பட்டி,  மறமடக்கி பள்ளி வழியாக மறமடக்கி  சென்றடையும். மேலும் மறமடக்கியி லிருந்து காலை 9.25 மணிக்கு புறப்பட்டு மீண்டும் ஆலங்குடியை வந்தடையும். எனவே, இப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் இச்சேவையினை உரிய முறை யில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்  என்றார்.  நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக மேலாண் இயக்குநர் எஸ். எஸ்.ராஜ்மோகன், புதுக்கோட்டை அரசு  போக்குவரத்துக் கழக பொது மேலாளர் இளங்கோவன், ஒன்றியக்குழு தலைவர்  வள்ளியம்மை தங்கமணி மற்றும் அலுவ லர்கள் கலந்துகொண்டனர்.

;