திருச்சிராப்பள்ளி, மார்ச் 14 - தமிழக அரசின் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசா யிகளுக்கு பிவிசி பைப் வாங்க ரூ.15,000 மானியமாக வும் மற்றும் புதிய மின்மோட் டார் வாங்க ரூ.10,000 மானியமும் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி யினர் இனத்தை சார்ந்தவ ராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விவ சாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும். தாட்கோ மூலம் மானியம் பெறாத ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கும், சிறு-குறு மற்றும் நடுத்தர விவ சாயிகளுக்கும், துரித மின் இணைப்பு திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் ஏற்கனவே தாட் கோ நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாட்டுத்திட்டம் மற்றும் துரித மின் இணைப்பு திட்டம் ஆகிய திட்டங்களில் பயன் பெற்றிருந்தாலும் இத்திட்டத்தில் பயன்பெற லாம். மேலும் பிஎம்கே எஸ்ஒய் - எஸ்டபுள்யுஎம்ஏ திட்டத்தில் மின்மோட்டார் மானியம் பெற்றவர்கள், வேளாண், தோட்டக் கலைத் துறை திட்டங்களில் மின் மோட்டார் பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் மானியம் பெற வழிவகை இல்லை. விண்ணப்பதாரர் தங்களது சாதிச்சான்று, வரு மானச்சான்று, குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, பட்டா, சிட்டா, அடங்கல், “அ” பதிவேடு, பாஸ்போட் சைஸ் போட்டோ, நிலவரை படம், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப் பட்ட விலைப்புள்ளி ஆகிய வற்றை ஆதிதிராவிட விவசா யிகள் தாட்கோ இணையதள முகவரியான http://tahdco. tn.gov.in பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்குமா றும், பழங்குடியின விவசா யிகள் http://fast.tahdco.com என்ற முகவரியிலும் பதி வேற்றம் செய்யலாம். இவ்வாய்ப்பினை ஆதி திராவிட மற்றும் பழங்குடி யின விவசாயிகள் பயன்ப டுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளரை நேரிலோ அல்லது 0431-2463969 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.