கூலித் தொழிலாளி பெற்றோர்களின் கவலை
தஞ்சாவூர், ஆக.2 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பின்னவாசல் கிரா மத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (39)- பிரியதர்ஷினி (28) தம்பதிகள் இவர் களுக்கு ஐந்து வயதில் காருண்யா என்ற பெண் குழந்தை உள்ளது. கண்ணன் கூலிக்கு தச்சு வேலை செய்து தனது பிழைப்பை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவர்களது மகள் காருண்யா பிறந்த இரண்டு மாதத்தில் உடல் முழுவதும் மஞ்சளாக மாறி பாதிக் கப்பட்டது. இதையடுத்து மருத்துவர் களிடம் அழைத்து சென்று பார்த்த போது, மஞ்சள் காமாலை நோய் பாதிப் பால், குழந்தையின் ரத்தம் முறிந்து விட்டது. வேறு ரத்தம் மாற்ற வேண்டும் என சொல்லி உள்ளனர். அதனைத் தொடர்ந்து குழந்தைக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. இருந்த போதிலும் தொடர்ந்து குழந்தைக்கு ரத்தப் பற்றாக்குறை இருந்து வந்தது. மேலும், குழந்தைக்கு அடிக்கடி உடல் நலக் கோளாறு ஏற்பட்டு வந்தது. குழந் தைக்கு மூச்சுத் திணறலும், காய்ச்சலும் ஏற்பட்ட நிலையில், அடிக்கடி சோர்ந்து விழுந்து விடுவதைக் கண்ட பெற் றோர்கள், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது குழந்தையின் எலும்பு மஜ்ஜையில் ரத்தம் உருவாகி மண்ணீ ரலுக்குச் செல்லும் போது, மண்ணீரல் அந்த ரத்தத்தை ஏற்காமல் போவதால் குழந்தைக்கு உடல் நலக் கோளாறு உள்ளது என்பது தெரியவந்தது. இதன் காரணமாக பிறந்த 2 மாதம் முதல் குழந்தைக்கு ரத்தம் செலுத்தி வந்துள்ளனர். குழந்தை இரண்டு வயதுக்கு பின்னர் 20 நாட்களுக்கு ஒரு முறை ரத்தம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் அரசு மருத்து வர்கள் அறிவுறுத்தலின் பேரில், சென்னையில் உள்ள தனியார் மருத்து வமனைக்கு சென்று பார்த்தபோது குழந் தைக்கு 5 வயது கடந்ததும் மண்ணீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தைக்கு என்ன நோய் என தெரியாத நிலையில் மருத்து வர்கள் பெற்றோர் இருவருக்கும் குழந் தைக்கும் மரபணு பரிசோதனை செய் துள்ளனர். மேலும், அடிக்கடி பல்வேறு பரிசோதனைகள் செய்ய பரிந்துரை செய்துள்ளனர். இதற்கு ஆயிரக்க ணக்கில் செலவு வருவதால், அதற்கு செலவு செய்ய வழியில்லாமலும், பரி சோதனை செய்யாததால் தங்கள் குழந் தைக்கு என்ன நோய் என மருத்து வர்கள் உறுதியாக தெரிவிக்காத நிலை யில், தற்போது உள்ள மருத்துவ செல விற்கு ரூபாய் 20 லட்சம் முதல் 30 லட்சம் வரை செலவாகும் என உத்தேச மாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள னர். இந்நிலையில் கூலி வேலை செய்து வரும் கண்ணன் மகள் காருண்யா உடல் நலக் குறைவு காரணமாக அவரை பள்ளிக்கு அனுப்ப முடியாமலும், குழந் தையை உடனிருந்து கவனித்துக் கொள்வதால் வேலைக்குச் செல்ல முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றார். போதிய படிப்பறிவு இல்லாத நிலை யில் என்ன செய்வது எனத் தெரியா மல் தவித்து வருகின்றனர். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கள் சூழ்நிலையை உணர்ந்து குழந்தைக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கவும் தங்கள் குழந்தை உயிரை காப்பாற்றவும் நட வடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ள னர். இது குறித்து குழந்தையின் தாயார் பிரியதர்ஷினி கூறுகையில், எங்க ளுக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதத்திலேயே அவரது உயிரை காக்க மருத்துவ சிகிச்சை அளித்து போராடி வருகின்றோம். எங்களது கணவர் குழந்தையை பார்ப்பதிலேயே கவனம் செலுத்துவதால், வேலைக்குச் செல்ல முடியாமல் சிரமப்பட்டு வரு கிறார். உடல் நலக்குறைவு காரண மாக குழந்தையையும் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. எங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை காப்பாற் றவே போராடி வரும் நிலையில், குழந்தையின் மருத்துவச் செலவு எங்கள் தலையில் விழுந்த இடி போல் உள்ளது. எனவே தமிழக முதல மைச்சர் எங்கள் குழந்தையின் உயிரை காப்பாற்ற உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்து எங்கள் வயிற்றில் பால் வார்க்க வேண்டும்” என்றார். அவருக்கு உதவ விரும்புவோர் தொடர்பு எண் கண்ணன் (ஜி-பே) 6385240427, வங்கி கணக்கு - K. கண்ணன், கனரா வங்கி, க/கு எண் 6051101013512, IFSC CNRB0006051.