districts

img

ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணைப்பகுதியில் கனிமக்கொள்ளையை தடுத்திடுக! கருத்துக்கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

ஒட்டன்சத்திரம்,மார்ச்3-  ஒட்டன்சத்திரம் பரப்ப லாறு அணைப்பகுதியில் கனிமக்கொள்ளையை தடுக்க வேண்டும் என்று  கருத்துக்கேட்பு கூட்டத்தில்  விவசாயிகள் வலியுறுத்தி னர்.  திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வடகாடு மலைக்கிராமத்தில் பரப்பலாறு அணை உள்ளது. இந்த அணையால் ஒட்டன் ்சத்திரம் நகராட்சிக்கு குடிநீர் தேவைக்கும், விவசாய பாசனத்திற்காகவும் முக்கிய பங்காக விளங்குகிறது. அணையில் மணல் மற்றும் வண்டல் மண் சுரங்கம் தூர் வாருவது பற்றி கருத்துக்கேட்பு கூட்டம் தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியம் சார்பில் நடை பெற்றது. கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விசாகன் தலைமை ஏற்றுப்பேசினார். பழனி கோட்டாட்சியர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.  கூட்டத்தில் பொதுப் பணித்துறை, நீர்வளத்துறை, வருவாய்த்துறை, வனத் துறை, அனைத்துக்கட்சி களின் நிர்வாகிகள், விவ சாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் பங் கேற்று தங்களின் கருத்துக் களை தெரிவித்தனர். ஒட்டன்சத்திரம் பரப்ப லாறு அணை பகுதிகளிலும், தூர்வாருகிறோம் என்ற பெயரில் சட்ட விரோதமான செயல்கள்  அரங்கேறாமல் தடுக்க, இயற்கையை பாது காக்க, சுற்றுச்சூழலை பாது காக்க, கனிமக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டத்தில் விவசா யிகள் வலியுறுத்தினர்.