கும்பகோணம், டிச.28- பழைய பென்சன் திட் டத்தை அமல்படுத்த வேண் டும், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர் கள், வருவாய் கிராம உதவி யாளர்கள், ஊராட்சி செயலா ளர்கள், ஊர்ப்புற நூலகர் கள், எம்.ஆர்.பி செவிலி யர்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் சார்பில் கும்பகோ ணம், திருவாரூர் பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம் கும்பகோணம் வட்ட கிளை சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு வட்டக் கிளை தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட் டத் துணைத் தலைவர் தமிழ்வாணன், மாவட்டச் செயலாளர் ரங்கசாமி, வட் டத் துணைத்தலைவர் பிரபா கரன் ஆகியோர் பேசினர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டம் முழுவதும் 32 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் செங்குட்டு வன், மருந்தாளுநர் சங்க மாநில பொதுச்செயலாளர் உ.சண்முகம் மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குடவாசல் வட்ட கிளை சார்பில் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் இணைச் செயலாளர் சி.சிவகுமார் தலைமை வகித்தார். முன்னாள் மாவட் டத் தலைவர் எம்.ராஜ மாணிக்கம், மாவட்ட இணைச் செயலாளர் கே. பாலசுப்பிரமணியன் ஆகி யோர் பேசினர்.