districts

திருவையாறு புறவழிச்சாலை பிரச்சனைக்கு தீர்வு காண ஆலோசனை ச.சு.பழநிமாணிக்கம் தகவல்

தஞ்சாவூர், ஜன.5-  திருவையாறு புறவழிச்சாலை பிரச்ச னைக்கு தீர்வு காண ஆலோசனை செய்  யப்பட்டுள்ளது என தஞ்சாவூர் தொகுதி  மக்களவை உறுப்பினர் ச.சு.பழநிமாணிக் கம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் புத னன்று நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்திற்கு மாவட்ட வளர்ச்சி ஒருங்  கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவரும், தஞ்சாவூர் தொகுதி மக்க ளவை உறுப்பினருமான ச.சு.பழநிமாணிக் கம் தலைமை வகித்தார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறு கையில், ‘‘மகாத்மாகாந்தி தேசிய ஊரக  வேலைவாய்ப்பு திட்டத்தில் 2021-22 ஆண் டில் ஏறத்தாழ ரூ.114 கோடி ரூபாய்க்கு மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டன. இத்திட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டில் நிலு வையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கப்பட்டது. தூய்மை இந்தியா இயக்கத்தில் வல்  லம் பேரூராட்சியில் கழிவுகள் மேலாண்மை சிறப்பாக மேற்கொள்ளப்படுகிறது. விக்கி ரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை யை விரைவுபடுத்தி முடிக்கவும், பூண்டி, அம்மாப்பேட்டை வழியாக தேசிய நெடுஞ்சாலையை விரைவாக முடிக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பொலிவுறு நகரத் திட்டத்தில் மேற் கொள்ளப்படும் அனைத்து பணிகளையும் மார்ச் மாதத்துக்குள் முடிக்க இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நெல்லுக்கு நிகராக சாகு படி செய்யக்கூடிய கரும்பில் புது வகை யான நோய் மஞ்சள் நிறத்தில் தென்படு கிறது. அதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் வேளாண் துறை ஈடுபட வேண்டும்.

திருமண்டங்குடி சர்க்கரை ஆலை விவ சாயிகளின் கோரிக்கையின்படி அரசும், மாவட்ட நிர்வாகமும் நிலுவையில் உள்ள  தொகையில் சட்டப்படியாக பெற்று தருவ தற்கான நடவடிக்கையை மேற்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. திருவையாறு அருகே திருப்பூந்துருத்தி வழியாகச் செல்லக்கூடிய புறவழிச்சாலை யால் 29 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள னர். விவசாயிகளுக்கு சமமான இழப்பீடு கிடைக்கவும், நீதிமன்றத்துக்குச் சென்றால் கூடுதலாக இழப்பீடு பெற முடியும் என்றால்,  அங்கே இருக்கக்கூடிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்காக வழக்காடுவதற்கும், மாற்று இடங்களை கண்டுபிடித்தால் அதை வழங்கவும் ஆலோ சிக்கப்பட்டது’’ என்றார். கூட்டத்தில் தமிழக அரசின் தலைமை  கொறடா கோவி.செழியன், கண்காணிப்புக்  குழு இணைத் தலைவர்களான மயிலாடு துறை தொகுதி மக்களவை உறுப்பினர் செ. ராமலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர்  எம்.சண்முகம், மாவட்ட ஆட்சியர் தினேஷ்  பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் ஆட்சியர்கள் என்.ஓ.சுகபுத்ரா (வருவாய்), எச்.எஸ். ஸ்ரீகாந்த் (வளர்ச்சி), சட்டப்பேரவை உறுப்பி னர்கள் டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), சாக்கோட்டை க.அன்பழகன் (கும்ப கோணம்), க.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை),  எம்.எச்.ஜவாஹிருல்லா (பாபநாசம்) உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.