districts

திருவிடைமருதூர் எம்.எல்.ஏ அலுவலகத்தில் மின் மோட்டார் திருட்டு

கும்பகோணம், அக்.26 - தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கோவிந்தபுரத்தில் திருவிடை மருதூர் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பி னர் அலுவலகம் உள்ளது. இதில் திருவி டைமருதூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக அரசு தலைமை கொறடாவுமான கோவி. செழி யன் பொதுமக்களை சந்திப்பதற்கும் தொகுதி  சம்பந்தப்பட்ட அலுவலக பணிகளை செய்வ தற்கும் அலுவலகம் அமைத்து செயல்பட்டு வருகிறது. இதில் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் மற்றும் அலுவலர்கள் பயன்படுத்த குடிநீர் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட் டிக்காக நீர்மூழ்கி மோட்டார் அமைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த அக்.23 அன்று அலுவலக பணிகளை முடித்துக் கொண்டு வழக்கம்போல் அலுவலகத்தை பூட்டி சென்றனர்.  மறுநாள் அக்.24 அன்று (தீபாவளி யன்று) மீண்டும் எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்தனர். பின்னர் அலுவலக பணியாளர் அன்பழகன் (38) மோட்டார் சுவிட்சை போட்டுள் ளார். ஆனால் மோட்டார் ஓடவில்லை. இத னால் சந்தேகம் அடைந்து ஆழ்குழாய் உள்ள  இடத்திற்கு சென்று பார்த்தபோது, ஆழ்குழா யின் வயரைத் துண்டித்து மின் மோட்டாரை  மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.  இதுகுறித்து அலுவலகப் பணியாளர் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் திரு விடைமருதூர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

;