districts

img

ராணி வாய்க்காலை சீரமைக்கும் பணி மீண்டும் தொடக்கம்

தஞ்சாவூர், மார்ச் 21-  தஞ்சாவூர் நகரின் தெற்கு  பகுதியான ரயில் நிலையம்,  வ.உ.சி. நகர், அருளானந்த நகர், மணிமண்டபம், பழைய நீதிமன்றச் சாலை ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் அப்போது அமைக்கப்பட்ட ராணி வாய்க்கால் மூலம் வடிந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூர முள்ள கீழவாசல் அழகி குளத்துக்கு சென்றது. இந்நிலையில், தஞ்சா வூர் மாநகராட்சி நிர்வாகம் ராணி வாய்க்காலை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூர்  வார முடிவு செய்து, வாய்க்  கால் பாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை கடந் தாண்டு அகற்றியது.  இர்வின் பாலம் கடந்  தாண்டு இடித்துவிட்டு மீண் டும் புதிதாக அகலப்படுத்தி கட்டப்பட்டது. அப்போது ராணி வாய்க்காலின் நீர்  வழித்தடத்தையும் புதுப் பிக்க முயன்றனர். ஆனால் ஆற்றில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் வாய்க்கால் சீரமைப்பு பணி களை முடிக்க முடியவில்லை. இதனால் பணிகள் நிறுத்தப் பட்டது. தற்போது ஆற்றில் தண்  ணீர் இல்லாததால், ஆற்றின் குறுக்கே ராணி வாய்க்கால் சீரமைக்கும் பணி தற் போது தொடங்கியது. முத லில் வாய்க்கால் இருக்கும் இடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டப்  பட்டு அதன்பிறகு கான்கீரிட் மூலம் கட்டப்பட உள்ளது. தொடர்ந்து ராணி வாய்க் கால் அழகி குளத்துக்கு செல்லும் நீர்வழித்தடத்தில் உள்ள அனைத்து ஆக்கிர மிப்புகளும் அகற்றப்பட உள்ளதாக மாநகராட்சி அதி காரிகள் தெரிவித்தனர்.