districts

img

இலவச குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் : மாதர் சங்க ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்

தஞ்சாவூர், மே 22 -  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சை ஒன்றிய 15 ஆவது மாநாடு தஞ்சை கணபதி நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.  கூட்டத்தில், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டப் பொருளாளர் இ.வசந்தி, ஒன்றியச் செயலாளர் எஸ்.வனரோஜா, ஒன்றியப் பொருளாளர் டி.வசந்தி மற்றும் ஒன்றியக்குழு தோழர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், தலைவராக சி.சரிதா, செயலாளராக எஸ்.வனரோஜா, பொருளாளராக ஜி.பார்வதி, துணைத் தலைவர்களாக டி.வசந்தி, மலர்விழி, துணைச் செயலாளர்களாக வெங்கடேஸ்வரி, பிரியதர்ஷினி ஆகியோர் உள்ளிட்ட 13 பேர் கொண்ட புதிய ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்திட வேண்டும், கன்னியம்மா நகர் மற்றும் மாத்தூர் ஏழு மக்களுக்கு இலவச குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

;