districts

img

தாயின் கண்களை தானமாக வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவர்  

தஞ்சாவூர், ஜன.2-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பையைச் சேர்ந்தவர் மறைந்த சா.சு.சோமு சேர்வை, இவரது மனைவி சோ.அபூர்வம் அம்மாள். இத்தம்பதிக்கு, சோ.பன்னீர், குருவிக்கரம்பை ஊராட்சி  மன்றத் தலைவர் சோ.வைரவன் என்கின்ற இருமகன் களும், நீலாவதி, இந்திரா ஆகிய மகள்களும் உள்ளனர்.  இந்நிலையில், அபூர்வம் அம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக டிசம்பர் 30 அன்று காலமானார். அம்மை யாரின் இரு கண்களையும் தானம் செய்ய லயன்ஸ் நிர்வாகி வைரவன் மற்றும் குடும்பத்தினர் முடிவு செய்தனர்.  இதையடுத்து, லயன்ஸ் சங்கத்துக்கு தகவல் தெரி விக்கப்பட்டு, டாக்டர் ஏ.பாலசுப்பிரமணியன் கண்களை பாதுகாப்பான முறையில் அகற்றி, கும்பகோணம் அர விந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.  கண்களைத் தானமாக வழங்கிய ஊராட்சி மன்றத் தலைவர் சோ.வைரவன் மற்றும் குடும்பத்தினருக்கு லயன்ஸ் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். லயன்ஸ் சங்கம் சார்பில் இதுவரை 3 ஜோடி கண்கள் தானமாகப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

;