districts

img

திருவையாறு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு: விவசாயிகள் நூதனப் போராட்டம்

திருவையாறு, டிச.17-  தஞ்சாவூர் அருகே  திருவையாறு புறவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரி வித்து விவசாயிகள் சனிக் கிழமை 8-ஆவது நாளாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக் களை எருமை மாட்டிடம் வழங்கினர். திருவையாறில் விவ சாய நிலங்களை அழித்து  புறவழிச்சாலை அமைப்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டியூரில் கடந்த நவ.30  ஆம் தேதி முதல் விவசா யிகள் தொடர் உண்ணாவிர தப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து சாலை  அமைக்கும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதை அடுத்து, கடந்த டிச.3 ஆம் தேதி யோடு விவசாயிகள் போராட் டத்தை தற்காலிகமாக கைவிட்டனர். இதனை தொடர்ந்து டிசம்பர் 8 அன்று, தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், புறவழிச் சாலை தொடர்பாக விவ சாயிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது‌. இதில் விவசாயிகளின் கோரிக் கைகளை ஏற்க அரசு அதி காரிகள் மறுப்பு தெரிவித்து, நீதிமன்றத்தின் மூலம் தீர்வு  காணுங்கள் என கூறினர். இந்நிலையில், டிச.10 முதல்  விவசாயிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட் டத்தை தொடர்ந்தனர். எட்டாவது நாளான சனிக் கிழமை நடந்த போராட் டத்தில், புறவழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும். மாற்று வழியை கண்டறிந்து ஆய்வு செய்து  சாலை அமைக்க வேண்டும். புறவழிச்சாலை திட்டத் தினை ஒன்றிய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி விவசாயிகள் எருமை மாட்டிடம் கோரிக்கை மனுவை வழங்கி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.