தஞ்சாவூர், நவ.1- திருவையாறு அருகே நெல் கொள்முதலில் பணி யாளர்கள் அலட்சியம் காட்டியதால், செவ்வாய்க் கிழமை விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கீழத் திருப்பந்துருத்தி, மேலத் திருப்பந்துருத்தி, திருவா லம்பொழில், கருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்க ணக்கான நெல் மூட்டைகள் கடந்த ஒருவாரமாக கொள் முதல் செய்யாமல் தேக்கம டைந்து உள்ளன. இந்நிலையில், விவசாயி கள் நெல்லை முறையாக காய வைத்து, ஈரப்பதம் அளவு சரி யாக இருந்த போதிலும், கொள்முதல் பணியாளர் கள் நெல்லை கொள்முதல் செய்யாமல் ஒரு வாரமாக அலட்சியம் காட்டி வருகின்ற னர். தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால், நெல் லின் ஈரப்பதம் அதிகரிக் கும். இதனால் விவசாயி கள் கண்டியூர் - திருக்காட் டுப்பள்ளி சாலையில், நெல் மூட்டைகளை வைத்து, தரை யில் படுத்து மறியலில் ஈடு பட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சி யர் பழனியப்பா மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தக வலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலா ளர் உமா மகேஸ்வரி விவ சாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கொள்முதல் நிலை யங்களை ஆய்வு செய்தார். பின்னர், உலர் இயந்தி ரம் அனுப்பி வைப்பதாக வும், அதன் பிறகு கொள் முதல் தொய்வு இல்லாமல் நடைபெறும் என உறுதி யளித்ததை தொடர்ந்து விவ சாயிகள் சாலை மறியலை கைவிட்டனர்.