பேராவூரணி, பிப்.6- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே, அம் மையாண்டி கிராமத்தில் 35 ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் கோப்பைக்கான கபடி போட்டி நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலை வர் மல்லிகை முத்துராம லிங்கம் தலைமை வகித்தார். பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் போட்டியை தொடங்கி வைத்தார். இதில், புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகை, தூத் துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில், ஒக்கநாடு மேலை யூர் அணி முதல் பரிசையும், நடுக்காவேரி அணி 2-ஆம் பரிசையும், தூத்துக்குடி துரைசிங்கம் அணி 3-ஆம் பரிசையும், நாகர்கோவில் அணி 4-ஆம் பரிசையும் வென் றன. நிகழ்வில், திமுக மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர், சேதுபாவா சத்திரம் ஒன்றிய பெருந் தலைவர் முத்துமாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண் டனர்.