districts

img

மணல் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து மாட்டு வண்டி தொழிலாளர்கள் போராட்டம்

தஞ்சாவூர், ஏப்.22 - திருவையாறு அருகே மணல்  ஏற்றி வந்த லாரியை, குவாரியிலேயே வழிமறித்து சிஐடியு மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள் ளது. போராட்டம் நடத்துபவர்களுடன் அரசு அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.  தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஒன்றியம் மரூர் அருகே, புதிதாக மணல் குவாரி எவ்வித அறிவிப்பும் இன்றி திறக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து லாரி லாரியாக மணல் கடத்தப்படுகிறது.  இந்நிலையில் வெள்ளிக்கிழமை சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெய பால் தலைமையில், முறைசாரா தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.என்.பேர்நீதி ஆழ்வார், சிபிஎம் திரு வையாறு ஒன்றியச் செயலாளர் ஏ.ராஜா,  பூதலூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் எம்.ரமேஷ், திருவையாறு சிபிஎம் ஒன்றி யக் குழு உறுப்பினர்கள் பிரதீப் ராஜ்குமார், ஸ்ரீதர், மணல் மாட்டு வண்டித்  தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பூதலூர்  இமானுவேல், ரமேஷ், பாபநாசம் நாக ராஜ், திருவிடைமருதூர் கோவிந்த ராஜ், கும்பகோணம் லட்சுமணன் உள்ளிட் டோர் லாரியை நகர விடாமல் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களுடன் திரு வையாறு வட்டாட்சியர், நீர்வள ஆதா ரத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து, சி.ஜெயபால் கூறுகை யில், “மரூரில் எவ்வித முன்னறிவிப்பு மின்றி மணல்குவாரி திறக்கப்பட்டு நூற்றுக்கணக்கான லாரிகளில் வெளி  மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங் களுக்கும் மணல் கடத்தப்படுகிறது. புதுக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.ஆர். என்ற தனியார் நிறுவனம் மணல்  அள்ளும் உரிமையை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனமே இந்த மணல் குவாரியை கண்காணித்து மணல் விநியோகம் செய்து வருகிறது.  

இதுகுறித்து உண்மை நிலையை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.  மணல் குவாரியை தனியார் நிறுவனத் திற்கு தாரை வார்ப்பது, மணல் கொள்ளைக்கு வழிவகுக்கும். மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கென அறிவிக்கப்பட்ட மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன.  மாவட்டம் முழுவதும் பல ஆயிரக் கணக்கான மாட்டுவண்டி தொழிலா ளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள் ளனர். எனவே, தமிழக அரசு மணல் மாட்டுவண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் காத்திட மணல் குவா ரியை திறக்க வேண்டும். கனரக வாகனங் களில் தனியார் நிறுவனம் மணல் அள்ள  அனுமதிக்கக் கூடாது. அரசும், அதிகாரி களும் இணைந்து மணல் கொள்ளையை  நடத்துகின்றனர். மரூர் மணல் கொள்ளை குறித்து தமிழக அரசு உரிய  விளக்கம் அளிக்க வேண்டும்” என்றார்.