districts

img

இடைத்தேர்தல்: காங்கிரசுக்கு ஆதித்தமிழர் பேரவை ஆதரவு

சேலம், ஜன.29- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங் கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங் கோவன் ஆதரவளிப்பதாக ஆதித் தமிழர் பேரவையின் நிறுவன தலை வர் அதியமான் தெரிவித்துள்ளார். ஆதித்தமிழர் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலத் தில் நிறுவனத் தலைவர் அதிய மான் தலைமையில் நடைபெற்றது. இதன்பின் அதியமான் செய்தியாளர் களிடம் கூறுகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டமன்றத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உரு வாக்கிய அம்பேத்கர், தந்தை பெரி யார், டாக்டர் கலைஞர் ஆகியோரின் பெயரை குறிப்பிடாமலும், பெண்ணு ரிமை, சமூக நீதி, பகுத்தறிவு, சமத்து வம், சுயமரியாதை போன்ற வார்த் தைகளை உச்சரிக்காமல் திட்டமிட்டு புறக்கணித்துள்ளார். தமிழ்நாட்டின் மாண்புகளை மதிக்காத ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும்; அவரை உடனடியாக ஒன்றிய அரசு திரும் பப்பெற வேண்டும். மாநகராட்சி, நக ராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி களில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பணியாற்றும் தூய்மை  தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். சேது சமுத்திர திட் டத்தை மீண்டும் தொடர முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் தீர் மானம் நிறைவேற்றி இருப்பதை வரவேற்கின்றோம், என்றார். மேலும், கையால் மலம் அள்ளு தல் தடை மற்றும் மறுவாழ்வுக்கான  சட்டம் 2013-யை தமிழ்நாட்டில் முழுமை யாக முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மலக்குழி மரணங்களை தடுப்பதற்கு செப்டிக் டேங்க் முறையை தடை செய்ய வேண்டும்.  மேலும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெறுவதற்கு ஆதரவு அளிப்பதாகவும், வேங்கை வயல் கிராமத்தில் குடிநீர் தொட்டி யில் மனித மலம் கலக்கப்பட்ட சம்ப வத்தில் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டறிந்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும், என்றார். இப்பேட்டியின்போது, ஆதித்தமி ழர் பேரவையின் மாவட்ட செயலா ளர் சந்திரன் உள்ளிட்ட மாநில செயற் குழு உறுப்பினர்கள், முன்னணி நிர் வாகிகள் பலர் உடனிருந்தனர்.