districts

img

காவல்துறையை கண்டித்து வாலிபர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, நவ. 26- சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள வள்ளலார் நகர் (மின்ட்) பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வடசென்னை மாவட்டக் குழு சார்பில் கடந்த புதன்கிழமை (நவ. 23) கையெழுத்து இயக்கம் நடை பெற்றது. அங்கு வந்த எச். 1 காவல்துறை யினர், கையெழுத்து இயக்கம் நடத்தக் கூடாது எனக்கட்டளையிட்டனர். அப்போது பொதுமக்களுக்கு இடை யூறு இல்லாமல் கையெழுத்து இயக்கம்தான் நடத்துகிறோம் என்று வாலிபர்கள்  கூறியுள்ளனர். இதை ஏற்றுக் கொள்ளாத காவல்துறையினர் அனைவரையும் தாக்கி குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று கைது செய்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையின ரின் இந்த அராஜக போக்கை கண்டித்து வாலிபர் சங்க வட சென்னை மாவட்ட குழு சார்பில் வள்ள லார் பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை (நவ. 26)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை செயலாளர் நீதி தேவன் தலைமை தாங்கினார்.இதில் மாவட்டத் தலைவர் நித்திய ராஜ், மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணதமிழன், விஜய், மாநிலக் குழு உறுப்பினர்கள் அபிராமி, தமிழ்செல்வி, மாவட்ட துணைத் தலைவர் மருகேசன் உள்ளிட்ட ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.

;